இறந்த பெண்ணின் சடலத்தில் காணாமல் போன கண்கள்… நடந்தது என்ன?

238

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலத்தில் ரசூலா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங். இவர் ஜோகேந்திர குமாரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பூஜா டிசம்பர் 10ம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பூஜாசிங்கின் பெற்றோர் ஜோகேந்திர குமாரும், அவரின் பெற்றோரும்தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்,

பூஜா சிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு பூஜா சிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பூஜா சிங்கின் உடலில் அவரின் கண்களை காணவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூஜாவின் பெற்றோர் மீண்டும் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். 2ம் கட்ட பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.


3 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ததில், அந்த சடலத்தில் இரண்டு கண்களும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல் கட்ட பிரேத பரிசோதனை செய்த முகமது ஆரிப், முகமது உவைஸ் ஆகிய மருத்துவர்களை உடனடியாக சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மருத்துவர்கள் உடலுறுப்பு வியாபாரம் செய்ததாக அவர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.