இளம் பெண் எரித்துக்கொலை.. பாழடைந்த குளத்தில் கிடந்த சடலம்!!

175

தென்காசியை அடுத்த இலத்தூர் பகுதியில் கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்தததாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.

இதையடுத்து அங்குக் கூடிய கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் உதவியோடு உடலுக்கு அருகில் இருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களையும் சேகரித்து விசாரித்து வருகின்றனர். எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், எதற்காக இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை அந்தப் பகுதிக்கு அழைத்து வந்தவர்கள் யார்? எதற்காக கொலை நிகழ்ந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுயில் மாயமான பெண்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், பேருந்து பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.


தமிழக அரசின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு மற்றும் மது விற்பனை போன்றவையே இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இளம்பெண்கள் கொலை செய்யப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தென்காசியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.