காதலியிடம் ஆசையோடு எதிர்பார்த்த காதலன்: ஆனால் இறுதியில் நடந்த துயரம்!!

336

வாமன் ராஜ்…..

பிறந்தநாளுக்கு காதலி வாழ்த்து கூறாததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் யாதவ ராஜ். இவரது மகன் வாமன் ராஜ் (21).

பி.காம் படித்துள்ள இவரைக் காணாமல் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.


அப்போது, அப்பகுதி சுடுகாடு ஒன்றின் அருகே விஷம் அருந்திவிட்டு மயங்கி கிடந்ததை அவதானித்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியநிலையில்,

இறந்துபோன வாமன்ராஜ் சமூக வலைதளம் மூலம் இளம் பெண் ஒருவருடன் நட்பாக பழகி பின்பு காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வாமன்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அவருக்கு அந்த பெண் வாழ்த்து கூறவில்லையாம்.

இதனால் மனமுடைந்த வாமன்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.