கால் டாக்சி டிரைவருடன் எஸ்கேப் ஆன பெண்… கதறும் கணவர்!!

109

தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்ததையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண் ஹைதராபாத் வந்துள்ளார். அங்கு டாக்ஸி புக் செய்யும் போது டிரைவர் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டதால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவு மலர்ந்தது. கடந்த செப்., 16ம் தேதி பெண்ணின் கணவரின் தாய் இறந்தார்.

இதனால்தான் அனைவரும் இந்தியா வந்துள்ளனர். இதற்கிடையில், செப்டம்பர் 30ம் தேதி கணவனை தனியே தவிக்கவிட்டு பெண், சிவாவுடன் பிறந்தநாளை கொண்டாட ரகசியமாக ஹைதராபாத் சென்றார்.

இதனால் கணவர் மனைவியை தேடியபோது அவர் ஹைதராபாத் சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, புகாரைப் பெற்ற போலீஸார், கோவாவில் இருந்து பெண்ணை மீட்டு லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டாக்சி டிரைவர் சிவா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.