தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரை குத்திக் கிழித்த மகன்கள்!!

7

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை மகன்கள் பலமுறை எச்சரித்தும், அவர் இது குறித்து தனது தகாத உறவைக் கைவிட மறுத்ததால், வீடு புகுத்து அவரை வெட்டிக் கொலைச் செய்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சஞ்சய் (27) மற்றும் ஜெயஸ் தாக்கூர் (23). இவர்களின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தங்களது தாயாருடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், தங்களது தாயாருடன் ரத்தன்ஜி தாக்கூர் என்பவர் தொடர்பு வைத்திருந்தார். அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது உறவு குறித்து மகன்களுக்கு தெரிய வந்ததும், அவர்கள் தங்கள் தாயாரையும், ரத்தன்ஜியையும் பலமுறை தனித்தனியே இது குறித்து கண்டித்து வந்துள்ளனர்.

ஆனால் இருவருமே அதைப் புறக்கணித்து விட்டு நெருங்கி பழகி வந்தனர். இதனால் கோபமடைந்த சகோதரர்கள் ரத்தன்ஜியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தி, கட்டையால் அடித்து தாக்கி உள்ளனர்.

இதனால், அவரது குடல்கள் வெளியே வந்தன, அவர் உயிருக்குப் போராடினார். ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ரத்தன்ஜியின் குடல்களை வெளியே எடுத்து வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரத்தன்ஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.